Pages

Sunday, April 27, 2025

சிரித்துக் கொண்டே பாட்டுப் போட்ட இளையராஜா அதிர்ச்சியில் கே.பாலசந்தர்

சிரித்துக் கொண்டே பாட்டுப் போட்ட இளையராஜா

அதிர்ச்சியில் கே.பாலசந்தர்

இப்படித்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அசகாயச் செயலை விபரிக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

புன்னகை மன்னன் பாடல் பதிவுக்காக இயக்குநர் கே.பாலசந்தர் குழுவினர், இசைஞானி இளையராஜாவோடு ஐந்து நாட் பயணத் திட்டத்தில் மதுரைக்குப் போய் ஒரு ஓட்டலில் தங்குகிறார்கள். 

அன்று காலை வாக்கில் கே.பாலசந்தர் படத்தின் கதையைச் சொல்லி ஐந்து பாடல்களுக்கான காட்சியைச் சொல்லி விட்டு, இளையராஜாவிடமிருந்து விடைபெற்று காலை 9 மணிக்கு விடை பெறுகிறார்கள்.

காலை 11 மணி அளவில் இளையராஜாவிடமிருந்து அழைப்பு.

ஐந்து பாட்டுகளுக்கும் மெட்டுப் போட்டுக் காட்டி விடுகிறார்.

அன்று மதியமே வைரமுத்துவும் பாடல்களை முடித்து விடுகிறார்.

ஆறாவதாக மாமாவுக்குக் குடும்மா குடும்மா பாடலை மாலை நேரம் தயாராக்கி விடுகிறார் இசைஞானி.

ஐந்து நாள் வேலை ஒரு மணி நேரத்தில் ராஜா கணக்கில் முடித்து வைக்கப்படுகிறது. இவரைத்தான் காசுக்காக அலைபவர் என்று ஒரு கூட்டம் இன்னமும் சொல்லிக் கொண்டு திரிகிறது பாருங்கள்.

இன்று வரை இந்தப் பாடல்கள் கூட இந்த நிமிடம் போட்டது போல அத்துணை புத்துணர்ச்சி வேறு.

"என்ன சத்தம் இந்த நேரம்" பாடல் ஒலிப்பதிவில் எஸ்பிபி பாடத் தயாராகும் போது

"இதைத் தணிந்த குரலில் பாடுங்கள்" என்று வேண்டுகோள் வைக்கிறார் ராஜா.

இந்தப் பின்புலத்தை சுரேஷ் கிருஷ்ணா சொல்லி முடித்ததும்

இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது, அந்தக் காதலர்களுக்கே தன் ஓசை படாமல் அந்தப் பாடல் அவர்களைப் பற்றிப் பாடுவது போலவொரு மனவெழுச்சி எழுகிறது.

Touring Talkies இல் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் அனுபவத் தொடரைத் தவற விடாதீர்கள்.


https://www.youtube.com/watch?v=ZJB_sO_pjWA